தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை சிறப்பாக பணியாற்ற வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார். திமுக இளைஞரணி செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், கட்சியின் அமைப்பு ரீதியாக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது.புதிய நிர்வாகிகளின் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வந்தார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக 2 மண்டலங்களுக்கான நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மக்களவை தேர்தல் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். மக்களவை தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து இளைஞர் அணியின் நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஆய்வு கூட்டத்தை நடத்த முடிவு செய்தார்.இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தருமபுரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் பணிகளை ஆய்வு செய்து, அவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்தினோம். என தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர், இளைஞர் அணி மாநிலசெயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


