தருமபுரியில் புத்த பூர்ணிமா மற்றும் பண்டிதமணி அயோத்திதாசர் பிறந்த நாள் விழா
தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் சார்பில் 2568 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா மற்றும் பௌத்த முன்னோடி பண்டிதமணி அயோத்திதாசர் அவர்களின் 179 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தருமபுரி நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள டாக்டர் .அம்பேத்கர் சிலையின் அருகில் இருந்து ஊர்வலம் துவங்கி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வெண்ணாம்பட்டி பௌத்த விகாரில் நிறைவடைந்தது
இந்த ஊர்வலம் சங்கத்தின் பொருளாளர் அமர சாக்கியன் அவர்களின் தலைமையிலும் சங்கத்தின் தலைவர் தம்மச் சுடர் மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் அப்பாதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் பௌத்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பகவன் புத்தரின் போதனைகள் மற்றும் அதன் சிறப்புகள்
,பௌத்த முன்னோடி பண்டிதமணி அயோத்தி தாசர் அவர்களின் பௌத்த மறுமலர்ச்சி பணிகள் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பௌத்த வழிகாட்டுதலின் தாக்கம் ஆகிய தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டது.
முன்னதாக பௌத்த வழிபாடு மற்றும் தியானம் கடைப்பிடிக்கப்பட்டது.
இறுதியில் பௌத்த உபாசகர் ஆனந்த செல்வம் நன்றிகூறினார்.
