தகடூர் புத்தகப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலைபயிற்சி முகாம்
தருமபுரி முத்து இல்லத்தில் , தகடூர் புத்தகப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலை கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கியது.
தகடூர் புத்தக பேரவையின் செயலாளர் மரு. இரா. செந்தில் முகாமுக்கு தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், குழந்தைகள் கைபேசியில் விளையாடுவதைக் கைவிட்டு கைகளைக் கொண்டு காலம்காலமாக விளையாடிய விளையாட்டுகளைத் தொடர் வேண்டும் என வலியுறுத்தினார். முகாமுக்கு பேரவையின் தலைவர்
இரா. சிசுபாலன், நிர்வாகிகள்
மு. கார்த்திகேயன், நெ.த. அறிவுடைநம்பி, ஜலஜாரமணி, லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் இ. தங்கமணி அறிமுக உரை நிகழ்த்தினார்.

பயிற்சியாளர் தியாக சேகர் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலை பயிற்சி அளித்தார். பின்னர் அவர் பேசுகையில், ஜப்பானிய மொழியில் ஓரி என்றால் மடிப்பு, காமி என்றால் காகிதம் என்றும் பொருள். காகிதங்களைப் பயன்படுத்தி உருவங்கள் செய்யும் கலை ஓரிகாமி. ஒரு சதுரமான அல்லது செவ்வகமான காகிதத்தை, கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல், பசை கொண்டு ஒட்டாமல் கயிறு கொண்டு கட்டாமல் ஒரு வடிவமாக உருவாக்குவதே ஒரிகாமியின் தனிச்சிறப்பு. அதனால் தான் இதைக் காகித மடிப்புக் கலை என்று அழைக்கின்றோம் என்றார் .
பயிற்சியில் பங்கேற்ற 57 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி பட்டறை மே -23 அன்றும் நடைபெற உள்ளது.
