தருமபுரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினம் அனுசரிப்பு
தருமபுரி கோல்டன் தெருவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு தருமபுரி மாவட்ட SC/ST பிரிவு மாவட்ட தலைவர் சம்பத் குமார் மாலைவைத்து,மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளர் INTUC மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கே.மோகன் மற்றும் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி காளியம்மாள் INTUC மண்டல செயலாளர் தங்கவேல் , மாவட்ட இலக்கிய அணி தலைவர் முருகவாசன், மாவட்ட விவசாய அணி தலைவர் மணிகண்டன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் முபாரக், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஆசிரியர் முத்து ,SC /ST பிரிவு தருமபுரி துணை தலைவர் மாதேஸ்வரன் மாவட்ட துணை தலைவர் குமரவேல் SC / ST பிரிவுபாலக்கோடு தொகுதி தலைவர் சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

