பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு .
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கவி அருவி உள்ளது. இங்கு குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்து குளிப்பது வழக்கம். இப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மலைப்பொழிவு அதிக அளவில் பொழிந்ததால் அருவியில் திடீர் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது ,நீர்வரத்து சற்று குறைந்தால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை என தெரிவித்தனர்.

