பணிபுரியம் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக புகார் குழு (ICC) அண்மைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ஆட்சியர் தகவல்
தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியம் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக புகார் குழு (ICC) அண்மைக்காத அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட ஆண்,பெண் இருபாலரும் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து பணி இடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தீர்வு, தடை) ன் படி உள்ளக புகார் குழு (Internal Complaint Committee) அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கூட்டுறவு துறை சார்ந்த சங்கம் மற்றும் நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், துணிகடைகள், நகைகடைகள், டிபார்ட்மெண்ட்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மேலும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலும் 4 நபர்கள் கொண்ட உள்ளக புகார் குழு (ICC) அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில் 50 சதவீதம் பெண்கள் இடம் பெற வேண்டும். உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டு அரசு விதிமுறைகளின் படி புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும்.
உள்ளக குழு (ICC) அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது ரூ.50000/- வரை அபாரதம் விதிக்கபடும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குழு அமைத்த விபரம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு 30.05.2024-ற்குள் அனுப்பி வைக்குமாறும் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய நிகழ்வு அறிக்கையினை ஒவ்வொரு பிரதி மாதம் 3 தேதிக்குள் மாதாந்திர அறிக்கையாக dswodpi2@gmail.com மின்னஞ்சலில் Google Sheet Update செய்தும் அதன் உண்மை நகல் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிட வளாகம், தருமபுரி-636705 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புக்கு
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிட வளாகம்,
தருமபுரி-636701
04342 – 233088 ,7871414935
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செய்தி குறிப்பில் தெரிவித்தார்.

