முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
பாரத ரத்னா முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியின் 33 ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு INTUC சார்பில் தருமபுரி அரசு மருத்துவமனை அருகே அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கே.மோகன் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி திருஉருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள்,INTUC மாவட்ட மண்டல செயலாளர் தங்கவேல் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் சி.முருகவாசன், மாவட்ட விவசாய அணி தலைவர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் குமாரவேல், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் முபாரக், SC/ST மாவட்ட தலைவர் சம்பத் குமார் மற்றும் மாதேஸ்வரன்,சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.
