வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.
வனப்பகுதியில் ஆடுமேய்ய ஆண்டியூர் கிராம இருளர் மக்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்டது.ஆண்டியூர் இருளர் காலனி. இங்கு 300 கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு விவசாயநிலம்இல்லை.ஆடுவளர்ப்பு,வனத்தில்,தேன்,சுன்டக்காய்,காட்டுவள்ளிகிழங்கு சேகரிப்பது,விவசாய கூலி வேலை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு, தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.இக்கிராமத்தில் பெரும்பகுதி குடும்பங்கள் ஆடுவளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் காலகாலமாக தீர்த்தமலை வனப்பகுதியில் ஆடுமேய்த்து வருவது வழக்கம். சமீபத்தில் ஆடுமேய்க்க அனுமதி மறுக்கும் வனத்துறையினர். குறைந்தது ரூ 5000,வரை அபராதம் விதிக்கின்றனர்.அன்றாட வாழ்க்கை நடத்த சிரமப்படும் இம்மக்கள் அபராதம் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே வனப்பகுதியில் ஆடுமேய்யவும், வன சிறுமகசூல் எடுக்க அனுமதி வழங்கவேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
