பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உடனே விண்ணப்பிக்கலாம்.
ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை பிஎச்டி (Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணாக்கர்கள் கீழ்காணும் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://overseas.tribal.gov. in/ மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 31.05.2024 மேலும் விவரங்களுக்கு https://overseas.tribal.gov. in/ அமைச்சகத்தின் போர்ட்டலைப் பார்வையிடவும்.என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

