தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு
2024 ம் ஆண்டு, இந்திய பாராளுமன்றத்திற்கு 7 கட்டமாக தேர்தல்நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல்கட்டமாக வாக்குபதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19 ம் தேதியன்று நடைபெற்றது.
தருமபுரியில் நடைபெற்ற பாராளுமன்ற பொது தேர்தல், வாக்கு பதிவு முடிவடைந்து,தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு4அடுக்கு பாதுகாப்புவழங்கிகண்காணிக்கப்பட்டுவருகிறது.

வரும் ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது.இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, திங்களன்று பார்வையிட்டார். உடன் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளனர்.

