நியாயவிலை கடை பணியாளர்களுக்கு அவரவர் வசிப்பிடங்களில் பணிமாறுதல் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
பதினோரு அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தினார், தமிழ்நாடு அரசு நியாய விலைகடை பணியாளர் சங்கத்தின் சார்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
மாவட்டசெயலாளர்ஏ.குமார்வரவேற்றார்.மாவட்டநிர்வாகிகள்கருணாகரன்,லட்சுமி,ஹரிதாஸ்,சுகதேவ்,சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலசிறப்புதலைவர் கு.பாலகிருஷ்ணன் சிறப்புறையாற்றினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலதலைவர் சுகமதி,சுற்றுலாத்துறை சங்க மாவட்ட துணை தலைவர் உமாசங்கர்,மாவட்ட பொருளாளர் ஜான் ஜோசப் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல்துறை நுகர்வோருக்கு தரமான பொருள் சரியான எடையில் வழங்கவேண்டும்.நுகர்பொருள் வாணிபத் கழகத்தின் மூலம் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நியாயவிலைகடைகளில் பொட்டலமாகவழங்கவேண்டும்.அத்தியாவசிய பொருள் இறஙகுவதற்கு கட்டாய இறக்குகூலி வசூல் செய்வதை தடுக்கவேண்டும்.பொருளின் எடை குறைவாக வழங்கிவிட்டு இருப்பு குறைவு என்று பலமடங்கு அபராதம் விதிப்பதை கைவிடவேண்டும்.புதிய 4G விற்பணைமுனையம்வழங்கவேண்டும்.ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்காலவைப்புநிதியைவைப்புநிதிஅலுவலகத்தில் செலுத்தவேண்டும்.
ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் சிக்கனநாணய கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் கூட்டுறவுதுறை நிர்வாகமேசெலுத்தவேண்டும்.பணிவரன்முறைபடுத்தாதபணியாளர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் ஒரேமாதிரி பதவி உயர்வு வழங்கவேண்டும் பணியில் இருந்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைவழங்கவேண்டும்.மாற்றுத்திறனாளிநியாயவிலைகடைபணியாளருக்கும்,பெண்நியாயவிலைகடை பணியாளருக்கும் எடையாளரை நியமணம்செய்யவேண்டும்.நியாயவிலை கடைபணியாளருக்கு அவரவர் வசிப்பிடம் பகுதிகளிலேயே பணிமாறுதல்வழங்கவேண்டும்.மருத்துவகாப்பீடுதிட்டத்தைவிரிவுபடுத்தவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
