டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்.
தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நலச்சங்கத்தின்தருமபுரி ,கிருஷ்ணகிரி, ஒருங்கிணைந்த மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரியில் உள்ள AICCTU அலுவலகத்தில் நடைபெற்றது.
அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.தினகரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அரிய குமார் சிறப்புறையாற்றினார்.AICCTU மாநில செயலாளர்சி.முருகன்வாழ்த்திபேசினார்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக பி.தினகரன், மாவட்ட செயலாளராக எம்.மோகன்,மாவட்ட பொருளாளராக ஜே.முனுசாமி,மாவட்டதுணைத்தலைவராக ஜி.திருப்பதி, மாவட்ட துணை செயலாளராக எஸ்.செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த15வருடங்களுக்கும்மேலாகபணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம்செய்யவேண்டும்.இத்துறையிலோஅல்லதுவேறுதுறையிலோ காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி டாஸ்மாக்கில்பணிபுரியும்மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.டாஸ்மாக் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சகப்பணியாளர்களால் ஏற்படும் பிரச்சனைகளை நிர்வாகம் தீர்க்க வேண்டும்.டாஸ்மாக் தலைமை அலுவலக உத்திரவின்படி சுற்றறிக்கை எண் 17/2023,நகல் எண் R-2/811/2023 உள்ளவாறு பணிமாறுதல் வழங்கவேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாகநிர்வாகி ஜி.திருப்பதி நன்றி கூறினார்.

