உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா !

இந்த விழாவிற்க்கு உழவர் கவிஞர் பொ.பொன்னுரங்கன் தலைமை தாங்கினார். கு. இராசகுமாரன் வரவேற்புரையாற்றினார். சீர.செம்முனி, திருமதி புத்தமணி சாக்ரடீசு. மாதேஸ்வரி(தேவி பல்பொருள்அங்காடி ஈஆர்கே செல்வராசு, ஜோதிடர் கி.அரங்கநாதன், வழக்குரைஞர் இலட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகல்வில் நாட்டுப்புறப்பாடல் திரைப்பாடகர் அறிவொளி காமராஜ் மற்றும் இசைப்பாட்டரங்கம் இராம தீர்த்தம் ஆகியோர் வழங்கினர். சிறுமியர் திருக்குறள் சொல்லுதல்- உரை நிகழ்த்தினர். மேலும் மாணவ மாணவியர் சிலம்பம் சுற்றும் நிகழ்வும் நடைபெற்றது. கனல்உரை கனல் கணேசன்
” நாவேந்தர் போற்றும் பாவேந்தர்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

கவியரங்கம்
“இலக்கிய அருவி” கவிஞர் கீரை பிரபாகரன் கவியரங்கத்தலைமை தாங்கினார். ” விடியலில் வழியும் வேர்வை..! எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

திருமதி உலக.தேன்மொழி “(திரூப்பத்தூர்) கவிஞர் இரா.கலைச்செல்வி(போச்சம்பள்ளி) கவிஞர் திருக்குறள் த. புனிதவள்ளி- (பாலக்கோடு) முனைவர் பெ. பாரதி (கிருஷ்ணகிரி) கவிஞர்.சுதாகர் ( கடத்தூர்) கவிஞர். முனைவர்.இரா சம்பத் (அரூர்)கவிஞர். மு.பிரேம்குமார்(அரூர்) கவிஞர். தி. கல்பனா (சேலம்) கவிஞர் ஒ. அமுதா முருகையன்(சேலம்)
திருமதி.வெ.புவனா (கூச்சனூர்) செல்வி. க. ஆர்த்தி(எல்லைப்புடையாம்பட்டி) கவிஞர். ஜெ.மா யஷ்வந்த் (சேலம்)
சுரா. சுரேகா, சுரா. கனீஷகா, ந.குழலி,ந. யுகஸ்வதி, சா.அனீஷ்பிராத்தனா. ஆகியோர் கவிதை பாடினர்.
பட்டிமனறம்
“நாடு முன்னேறப்பெரிதும் வேண்டுவது ஓய்வறியா உழைப்பா
உன்னதமான சிந்தனையா ! எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

பட்டிமன்ற நடுவர்
“திராவிடச்செம்மல்” கேஷ் .சா. இராசேந்திரன்
ஓய்வறியா உழைப்பே!
முனைவர் பெ பாரதி (கிருஷ்ணகிரி)
க. ஆர்த்தி(எல்லைப்புடையாம்பட்டி)
தாரை சு.தைலப்பன்
இரா. கலைச்செல்வி (போச்சம்பள்ளி)

உன்னதமா சிந்தனையே!
எழுச்சிநிறை . திரு.கனல் கணேசன் (சேலம்)
திருக்குறள் த. புனிதவள்ளி (பாலக்கோடு), ஜெ.ம. யஷ்வந்த்
சு.பி. ரோஹன் (பள்ளிப்பாளையம்) எனும் தலைப்பில் பேசினர்.
நிகழ்வின் இறுதியில் வே. பசுபதி (பாளையம்,) நன்றியுரையாற்றினார்.

