வைக்கோல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி மின்கம்பம் முறிந்தது ; ஓட்டுநர் உயிர் தப்பினார்

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் குருபரஅள்ளி கிராமத்தின் வழியாக அரூரில் இருந்து பொம்மிடிக்கு மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி மின்கம்பம் உடைந்து லாரியின் மீது விழுந்தது.

லாரி முழுவதும் வைக்கோல் ஏற்றி வந்த லாரி குருபரஅள்ளி கிராமத்தில் உள்ள நெருக்கமான சாலையில் செல்ல முயன்றபோது மின்கம்பிக்கு வைக்கோல் உரசி மின்கம்பியை இழுத்து தள்ளியத்தில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உயிர்தப்பினார். மின் கம்பம் உடைந்ததில் வேறு அசம்பாவித்தங்கள் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்டதும் காவல் துறை மற்றும் மின் வாரியத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
