மே 1 தொழிலாளர் தினத்தில் அண்ணல் அம்பேத்கர் அறிவகம் கல்வி அறக்கட்டளை சார்பில் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காரிமங்கலத்தில் அண்ணல் அம்பேத்கர் அறிவகம் கல்வி அறக்கட்டளை சார்பில் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் தலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர் மனோகரன், துணைத் தலைவர் கே.வி.கே சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் கருப்பண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்திய ரமேஷ், சிவகுமார்,ராஜம்மாள், பொதுக்குழு உறுப்பினர் குட்டி என்கிற மோகன், விடுதலை சிறுத்தை கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன், பிரகாஷ் இ.சி.எ.பா, பென்னாகர சட்டமன்ற தொகுதி செயலாளர் வீர செங்கோலன், நகர துணை செயலாளர் கிருஷ்ணன் சுகேந்திரன் ஆர்.டி.எஸ் தொண்டு நிறுவனர் அண்ணாதுரை, காரிமங்கலம் திமுக தகவல் தொழில்நுட்பு அமைப்பாளர் சம்பத் மற்றும் கனிஷ்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
