மே 1 உலகத் தொழிலாளர் தினத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்.
மே1 -2024 உலகத் தொழிலாளர் தினத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஓசூரில் மாலை 3.00 மணியளவில், சார் ஆட்சியர் அலுவலகம் அருகில், தோழர் ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர், அவர்கள் தலைமையில் பேரணி தொடங்கியது. மாலை 4.00 மணியளவில் ராம் நகர் அருகே பேரணி நிறைவுற்று, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சங்கர், மாவட்ட செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, அவர்கள் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர் விக்னேஷ், மாவட்ட செயலாளர், தமிழகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்.தோழர் சுந்தரம்,மாநில பொதுச் செயலாளர்,FlTU, ஓசூர். தோழர் ரகுவரன்பொதுச் செயலாளர், கன்சாய் நெரோலக் தொழிற்சங்கம்,ஓசூர். தோழர் கோபிநாத் மாநில இணைச் செயலாளர்,புரட்சிகர மக்கள் அதிகாரம்,தமிழ்நாடு, ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக தோழர் ஜெயராமன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.


