பாப்பிரெட்டிப்பட்டி, பேரூர் கழக சார்பில் தாகம் தீர்க்கும் நீர்,மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன்.
கடுமையான வெயிலை மக்கள் சமாளிக்க தருமபுரி மேற்கு மாவட்டம்,கடத்தூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பேரூர் கழக சார்பில் கோடை வெயிலில் தாகம் தீர்க்கும் நீர்,மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன். தர்பூசணி,இளநீர் பழசாறுகள் வழங்கி,கோடை வெயிலில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுகொண்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் கோ.ஜெயசந்திரன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சித்தார்த்தன் , மாநில வர்த்தகர் அணி துணை செயலார்
அ.சத்தியமூர்த்தி தலைமை கழக பேச்சாளர் இராசு.தமிழ்ச்செல்வன் பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். உடன் திமுக பேரூர் கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

