அரூரில் கொங்கு வேளாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் ,
தருமபுரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கம் தலைவர் வே.சந்திரசேகர் ஆணைக்கினங்க தோட்டா தமிழ் ஏற்பாட்டில்,நீர்மோர்பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோடை வெப்பம் தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை அரூர் வணிகர் சங்க தலைவர் ஏ.வி.சின்னசாமி, கேப்டன் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, நீர் மோர் இளநீர் பந்தலை திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர் அறிவரசு, அஸ்வின், சுதாகர், சந்தோஷ், வசந்தகுமார், மோப்பிரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுரேந்திரன், துணை தலைவர் சுப்பிரமணி, அஜீத்குமார், கருணாநிதி, குமார், வடிவேலன், சிவா அரவிந்தன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

