தருமபுரி விடுதிகாப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா தருமபுரி ஏபிஎஸ் பிளாசாவில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கே.தேவன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எம்.வேலு வரவேற்றார்.
மாவட்ட இணைசெயலாளர் தினமணி முன்னிலை வகித்தார்.
பணி ஓய்வுபெற்ற பட்டதாரி காப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள்,மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ,மாவட்ட செயலாளர் தெய்வானை,மாவட்ட செயலாளர் எம்.அன்பழகன் ,மாவட்ட நிர்வாகிகள் கே.புகழேந்தி ,எம்.முருகன்,பி.மகேஸ்வரி , சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சி.காவேரி ,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையத் முகைதீன் இப்ராகிம் ,காப்பாளர் சங்க மாநில பொருளாளர் கே.நாராயணசாமி,மணிலா இணைச்செயலாளர் மணிகண்டன்,மாநில துணைத்தலைவர் எம்.மகேஷ்குமார், மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி மாவட்ட தலைவர் எஸ்.பச்சியப்பன், நிர்வாகிகள் வடிவேலன் , மாரியப்பன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
ஓய்வுபெற்ற விடுதி காப்பாளர் வி.விநாயகசுந்தரி ஏற்புறையாற்றினார்.

