அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா
தருமபுரி ஏப்-23,
ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு பென்னாகரம் ஒன்றியம் சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு
வாசிப்பின் அவசியம் குறித்தும்,
புத்தகங்கள் குறித்தும்
தலைமை ஆசிரியர் மா. பழனி பேசிகையில் :
வாசிப்பு அனுபவம்
புத்தகங்களை வாசிப்பதன் வாயிலாக கிடைக்கிறது.
புத்தகங்களை வாசிக்க வாசிக்க வாசிப்பவர்கள் பன்முகத்திறன் பெற்றவர்களாக மாறுகிறார்கள்.
புத்தகம் படிப்பதன் வாயிலாக நல்ல பழக்கவழக்கங்கள் படிப்பவர்கள் மத்தியில் உருவாகிறது.
வாசிப்பை சுவாசம் போல நேசித்து தினமும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் எந்த விதமான தீய பழக்கங்களுக்கும் ஆளாகாமல்
சமூகத்தில் போற்றப்படுபவர்களாக வாழ்கிறார்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கைப்பேசியில்
தேவையற்றவைகளை பார்த்து
நேரம் செலவிடுவதை தவிர்த்து மாணவர்கள் இளைஞர்கள் படிப்பின் மீது வாசிப்பின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர் பழனி பேசினார்.
மாணவர்கள் வாசித்த புத்தகங்கள் பற்றி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

