இந்தியா கூட்டணியின் தருமபுரி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ஆ.மணி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் நகரத்தில் திராவிடர் கழகம் சார்பில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் B.C.R மனோகரன் அவர்கள் முன்னிலையில், திராவிடர் கழக தலைமை கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் அவர்கள் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

உடன் தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மாநில ஆதிதிராவிட நலக்குழு து. செயலாளர் அரூர் சா. இராஜேந்திரன், கழக காப்பாளர் விடுதலை அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன், அரூர் இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், பகுத்தறிவாளர் கழகம் இரா. கிருஷ்ணமூர்த்தி, மா, தொழிலாளரணி செயலாளர் பெ. மாணிக்கம், அரூர் ப.க. செயலாளர் குமரேசன், ஊமை காந்தி, செந்தில் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.


