தருமபுரி அருகே 4 கள்ளதுப்பாக்கிகளை பொது இடத்தில் வீசிவிட்டு சென்ற மர்மநபர்கள்.
தருமபுரி அருகே பால்சிலம்பு மலைகிராமத்தில் 4 கள்ளத்துப்பாக்கிகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பொது இடத்தில் வீசப்பட்டது.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகம் கடத்தூர் பிரிவு – பால்சிலம்பு கிராமத்தில் வனவிலங்கு வேட்டை தடுப்பு மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதன் விளைவாக இன்று (08-04-2024) 4 கள்ள நாட்டுத்துப்பாகிகள் அடையாளம் தெரியாத நபர்களால் பொது இடத்தில் வீசப்பட்டது ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாக பெறப்பட்டது.

தருமபுரி மாவட்ட வன அலுவலர், உத்தரவுபடியும் மற்றும் அரூர் உதவி வனப்பாதுகாவலர், அறிவுரையின்படி கடந்த 28-02-2024 அன்று வேட்டைதடுப்பு மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாமில் ஊர்பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தனர். அதில் வேட்டைக்கு பயன்படுத்த கள்ளத்தனமாக வைத்திருக்கும் நாட்டு துப்பாக்கிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், ஊர் பொது இடத்தில் வீசப்பட்டால் வழக்கு ஏதும் தொடரப்படமாடடது.மேலும் தங்களுக்கு துப்பாக்கியை ஒப்படைக்க வாய்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் பால்சிலம்பு கிராம வனக்குழு தலைவர் பூபாலன், ஊர்மக்களை ஒன்று கூட்டி ஊர் கட்டுப்பாடு விதித்து கள்ளநாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மாரியம்மன் கோவில் அருகே போட்டுவிடுமாறு கூறப்பட்டது. இதன் விளைவாக மார்ச்-7 அன்று 4 கள்ள நாட்டுத்துப்பாக்கிகள் வீசப்பட்டுள்ளதாக பால்சிலம்பு வனக்குழு தலைவர்மூலம் கிடைக்கப்பெற்ற தகவவின்படி, மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வனப்பாதுகாவலர் ஆகியோர் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஆறிவுரையின்படி மொரப்பூர் வனச்சரக அலுவலர் மு.ஆனந்தகுமார் தலைமையில் மொரப்பூர் வனச்சரக குழுவுடன் சென்று வீசப்பட்ட 4 கள்ள நாட்டுதுப்பாக்கிகளை கைப்பற்றப்பட்டது. இதன்மீதான தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

