தன்னை தேர்ந்தெடுத்தால் நல்ல திட்டங்களை கொண்டுவருவேன். தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேட்டி
தருமபுரிநகரம்,குமாரசாமிப்பேட்டையில்தேசிய ஜனநாயக கூட்டணியின், தருமபுரி பாராளுமன்ற தொகுதி, பாமக வேட்பாளர், முனைவர் செளமியா அன்புமணி, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த நான்கு நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் மேட்டூர், அரூர், பென்னாகரம், இன்று தருமபுரியில் பிரச்சாரம் மேற்கொள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் தான் என பெருமிதம் தெரிவித்த அவர் தான் செல்லும் இடமெல்லாம் பெண்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தார்.
தன்னை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை கொண்டு வருவேன் ,தருமபுரி மாவட்டத்திற்க்கு பல்வேறு நிகழ்ச்சிக்கு வருகைதந்துள்ளேன். இந்த மாவட்டத்தில் எல்லா பிரச்சனைகளும் நமக்கு தெரியும், இந்த பிரச்சனைகளை கண்டிப்பாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். தருமபுரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக உள்ளது செல்கின்ற இடங்களில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர். மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி வருவார். தருமபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகம் உள்ளது.நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது குறைந்த நீதி ஒதுக்கியிருந்தாலே பல நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றிருக்கமுடியும். அதனை கண்டிப்பாக தீர்ப்பேன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் குறிப்பாக காவிரி உபரி நீர் திட்டம், எண்ணேகோல் புதூர் தும்பலஅள்ளி திட்டம் ,உள்ளிட்ட நிலுவையில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். நிலுவையில் உள்ள நீர் பாசன திட்டங்களை மத்திய அரசும் நிறைவேற்றலாம் மாநில அரசும் நிறைவேற்றலாம் தெரிவித்தார். தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்காக முன்னாள் நடுவன் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் 19 முறை ரயில்வே அமைச்சரை பார்த்து முதற்கட்டமாக திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றது பாராட்டுக்குரியது
. அதனை மீண்டும் பின் தொடர்ந்து கண்டிப்பாக மொரப்பூர் ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுவேன் என்றார். தற்போது தருமபுரி தொப்பூர் நெடுஞ்சாலையில் உயர் மட்டும் மேம்பால சாலை அமைக்க மத்திய அரசு சுமார் 900 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததை சுட்டிக்காட்டினார்.தருமபுரி மாவட்ட மக்களின் பிரச்சனைகளை பேசுகின்ற ஒரே கட்சி பாமக என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி சட்ட மன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் ஐஸ்வர்யம் முருகன் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் புகழேந்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் டி கே ராஜேந்திரன் நிர்வாகி ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
