உழவர் சந்தையை அமைத்த கலைஞர்: உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும்.
தடங்கம்.பெ.சுப்பிரமணி
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து தருமபுரி உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சார நிகழ்ச்சிக்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை வகித்தார்.
திமுக தொழில்நுட்ப அணி மாநிலதுணைசெயலாளர் மருத்துவர் ஏ.கே.தருண்,மாவட்ட பொருளாளர் தங்கமணி நகரசெயலாளர் நாட்டான் மாது,அறங்காவலர் குழு உறுப்பினர்.மே.அன்பழகன் ,பொருளாளர் சம்மந்தம்,நகர நிர்வாகிகள் சுருளிராஜன்,தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் கெளதம், சுற்றுச்சுழல் அணி மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் சங்கர்,மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன்,இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அசோக், நகர மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரன், பாண்டியன்,நகர நிர்வாகிகள் அழகுவேல் முல்லைவேந்தன் சம்மந்தம் சுருளிராஜன் பாண்டியன்,முன்னாள் இளைஞர்கள்,அணி துணை அமைப்பாளர்செல்லதுரை ஆகியோர்கலந்துகொண்டு பேசினர்.

தருமபுரி மாவட்டத்தை பொருளாதார ரீதியாக வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்லவும் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறவும்,விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம்,கேஸ்,டீசல் ,பெட்ரோல் விலையை குறைக்க உதய சூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

