தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கிராமங்கள் தோறும் பிரச்சாரம்.
சிபிஐ(எம்.எல்) முடிவு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பாக தருமபுரி மாவட்ட தருமபுரி சட்டமன்ற தொகுதி
தேர்தல் பிரச்சார முன்னணி ஊழியர்கள் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு
மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.இந்த ஊழியர் கூட்டத்தில்,மாவட்ட குழு உறுப்பினர்கள் சி முருகன், ராமதிலகன், ராஜி ஆகியோர்கலந்துகொண்டுபேசினர்.
மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கவும்.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யவும்,
தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யவும்
விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் – வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யவும்,
உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவுடன் பிளஸ் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி, குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யவும்
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றவும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-ல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்த ,வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்
மோடி அரசாங்கத்தை வீழ்த்த தருமபுரி பாராளுமன்ற தொகுதி
இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்பது, கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

