தருமபுரி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 10,35000 பறிமுதல்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம்,மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு அருகில் மார்ச் 28 அன்று மாலை பறக்கும் படை குழு- 2 ,பணி முறை மாரியப்பன் தலைமையிலான குழு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது,மாரண்டள்ளியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற, ஓசூர் முகவரியை சேர்ந்த லட்சுமி க/பெ ரகுநாத் என்பவர் தேர்தல் நடத்தை விதிகள் மீறி ஆவணம் இன்றி ரூபாய் 10,35000/- எடுத்து செல்வது தெரியவந்தது. இந்த தொகையை கைப்பற்றி பாலக்கோடு சார்நிலை கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
