தொப்பூர் சோதனை சாவடியில் 2.61 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்.
தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொப்பூர் சோதனை சாவடியில் (26.03.24) நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்ட 16.038 கிலோ தங்கம் உட்பட மொத்தம் 23 கிலோ அளவுள்ள நகைகள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 2.61 கோடி ஆகும்.
ஆய்வில் கைப்பற்றப்பட்ட பொருட்களை தருமபுரி சட்ட மன்றத் தொகுதியின் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

