தருமபுரி மார்ச்-29 முதல்வர் ஸ்டாலின் வருகை: முன்னேற்பாடு பணி குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ஆ.மணி போட்டியிடுகிறார்.
வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து வருகின்ற மார்ச் 29 அன்று தருமபுரி, தடங்கம் அருகே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க்க உள்ளார்.
பொதுக்கூட்ட ஏற்பாட்டு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

உடன் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி,மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி பழனியப்பன், நாடாளுமன்ற வேட்பாளர் ஆ மணி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


