தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.மணி.

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளராக வழக்கறிஞர் ஆ.மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழக்கறிஞர் ஆ மணி, தருமபுரியில் உள்ள பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காமராஜர், Dr.அம்பேத்கார் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. உடன் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர்கள் பெ. சுப்பிரமணி மற்றும் பி. பழனியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


