பென்னாகரம் வட்டம் கோட்டூர்மலை கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.

பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி தரப்பு கோட்டூர்மலை கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு குறித்து இன்று மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் தலைமையில் பென்னாகரம் சட்டமன்ற பிரிவு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், பென்னாகரம் வட்டாட்சியர் மண்டல துணை வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அடங்கிய குழு 3 டிராக்டர்களில் மேற்கண்ட கிராமத்திற்கு சென்று கிராம மக்களுடன் பேசப்பட்டது.

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது 85 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்ட வாக்காளர்களுக்கு 12dபடிவம் வழங்கப்பட்டது அவர்களது பிரதான கோரிக்கையான சாலை வசதியை மேம்படுத்த ஹிட்டாச்சி வாகனம் மூலம் பணி துவங்கியுள்ளது. அனைவரும் 100% வாக்களிக்க உறுதியளித்தனர்.


