அரூர் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,61,500/-பறக்கும்படையினர் பறிமுதல்
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியான அனுமந்தீர்த்தம் சோதனைச் சாவடியில் மார்ச்18 அன்று 7.45 மணியளவில் பறக்கும் படை அலகு I ,குழு ll வெங்கடேசன் என்பவர் தனது குழுவுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருப்பத்தூரில் இருந்து அரூர் நோக்கி உதய பிரகாஷ் என்பவர் ஒட்டி வந்த வண்டி எண். TN75V 6034 Swift Desire Car வாகனத்தை சோதனை செய்யும் பொழுது உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,61,500/- உதய பிரகாஷ் என்பவர் எடுத்துச் செல்வது தெரியவந்தது.எனவே அவரிடமிருந்து மேற்கண்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டு அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுளது

