பெரியாம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது.பெரியாம்பட்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் காமராஜ் நகர்,பெரியாம்பட்டி, புலுக்குறிச்சி,ஜொல்லம்பட்டி,காசிகொல்லன்பட்டி உள்ளிட்ட 20 கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில் உள்ள காமராஜ் நகர்,பெரியார் புல்லுகுறிச்சி ஆகிய கிராமங்களுக்கு மாதம் ஒரு முறைதான் ஒகேனக்கல் குடிநீர் வருகிறது.ஊராட்சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் வருவதில்லை .குடிநீர் இல்லாமல் இங்குள்ள மக்கள் விலைகொடுத்து வாங்கும் நிலைமை உள்ளது.சிலர் விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்துவருகின்றனர்.

குடிநீர் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து அப்பகுதி பெண்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெரியாம்பட்டி தருமபுரி – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிகிடைக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்தின் அடிப்படையில் பெண்கள் மறியலை கைவிட்டனர்.


