பெரியார் பல்கலைக்கழகம் முன்பு தலித் விடுதலை இயக்கம் முற்றுகை போராட்டம் .
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பட்டியல் இன அருந்ததியர் மக்களின் உள்ஒதுக்கீட்டனை திட்டமிட்டு பொதுப் பட்டியலுக்கு மாற்றி பணி நியமனங்கள் வழங்கப்பட்டதை கண்டித்து தலித் விடுதலை இயக்கம் சார்பாக பல்கலைக்கழகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் மணிகன்டன் முன்னிலை வைகித்தார்.போராட்டத்தை அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பிரதாபன் துவக்கிவைத்தார். அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாவட்ட துனைத் தலைவர் ராம்ஜீ,தேசிய அம்பேத்கர் கட்சி காடையம்பட்டி ஒன்றிய செயலாளர் ஆ.ராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.தலித் விடுதலை இயக்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் இளையராசா நன்றிகூறினார்.

