தருமபுரி பாராளுமன்றத்தில் பதற்றமான 292 வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம், பாராளுமன்ற பொதுத் தேர்தல்2024-க்கான அறிவிப்பை கீழ்கண்டவாறு வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, நகராட்சி/பேரூராட்சிப் பகுதியில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை செய்யக்கூடாது எனவும், கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும்பட்சத்தில், அவ்விளம்பரம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் விளம்பரம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்தவும், வாகனங்களை உபயோகிக்கவும் முடியும்.
பாராளுமன்றத்தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் அவர்களது படைக்கலன்களை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்குமாறும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் படைக்கலன்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடைசெய்து.

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் 11,660 அரசுஅலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ,தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்ட்டுள்ள 292,வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வீரர்களும், Micro Observers களும் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், இந்த வாக்குச்சாவடிகளில்Web Casting/Video Coverage செய்யப்பட உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 16.03.2024நாள்முதல் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதற்கும் 45 பறக்கும் படைகுழுக்களும் ( Flying Squads Teams) மற்றும் 45 நிலையான கண்காணிப்பு குழுக்களும்( Static Surveillance Teams) அமைக்கப்பட்டு24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. தேர்தல் குறித்து புகார்தெரிவிக்க இந்திய தேர்தல்ஆணையம், உருவாக்கியுள்ள CVigilApp,செயலியிலும்,புகார்அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.comஎன்ற மின்னஞ்சல்,முகவரியில்தெரிவிக்கலாம். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7017மற்றும் வாட்சப், குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்ள 9363754335 என்ற எண்ணுள்ள கைபேசியும் 24 மணி நேரமும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளைச்சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலைஅமைதியாக நடத்த ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்தார்.
. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ. அசோக்குமார் ,உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்

