தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது.
தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் – 2024 நடத்தை விதிகள் 16.03.2024 இன்று மாலை முதல் அமலில் உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள வரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், போன்ற இதர குறை தீர்க்கும் கூட்டங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மற்றும் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் போன்றவை,நடைபெறாது,என பொதுமக்களுக்கு,தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.
