AICCTU தருமபுரி மின்பகிர்மான திட்ட குழு கூட்டம்
தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கம் AICCTU தருமபுரி மின் பகிர்மான திட்டஅவசர குழு கூட்டம், தருமபுரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுதொழிலாளர் சங்கத்தின் திட்ட தலைவர் திருமாறன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின் திட்ட செயலாளர் வி.சிவராமன் வரவேற்றார் .

கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின்மாநில தலைவர் சி. முருகன் கலந்து கொண்டு,உறுப்பினர் சேர்க்கை,சங்க வளர்ச்சி நிதி,சங்கத்தின் எதிர்கால திட்டம்,குறித்து பேசினார்.
இக்கூட்டத்தில் ஜெயமணி,ஜான்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .இறுதியாக திட்ட பொருளாளர் டி. விஸ்வநாதன் நன்றி கூறினார்.

