புதியதாக பொறுப்பெற்றுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு AICCTU, தலைவர்கள் வாழ்த்து.
தருமபுரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளராக பதவி ஏற்றுள்ள சுமதியை நேரில் சந்தித்து தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் (AICCTU) வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது மேற்பார்வை பொறியாளர் சுமதிக்கு மார்கீயம்கார்க்கி எழுதிய தாய் நாவலை வழங்கி தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சி முருகன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுதொழிலாளர் சங்கத்தின் தருமபுரிதிட்டசெயலாளர் சிவராமன், திட்டபொருளாளர் விஸ்வநாதன், மகளிர்அணிசெயலாளர் ஜெயமணி, தருமபுரி திட்ட நிர்வாகிகள் ஜான்சன், வினோத், ஜீவிதா,தேவி,ராணி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

