குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் த.கு.பாண்டியன், சி.கே.சாக்கன் சர்மா, கா.கருப்பண்ணன் ஆகியோர்,தலைமைவகித்தனர்.நிர்வாகி அம்பேத்வளவன் வரவேற்றார்.
மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் ,மண்டல செயலாளர் ஜே.கே.தமிழ்அன்வர்,மண்டலதுணைசெயலாளர் மின்னல் சக்தி,திமுக.மாவட்ட பொருளாளர் தங்கமணி , மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீர்த்தராமன், இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர்கள் சுபேதார்,சீரஜீன்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை கலைவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி, நிர்வாகிகள்,கி.ராஜா(எ) மண்ணன் சிவஞானம் , செந்தில்குமார்,ஜெகநாதன் ,குமரன்,ஆட்டோகிருஷணன்,விடுதலைமதி ஆகியோர் பேசினர்.
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் மதசார்பின்மையை சிதைக்கும் ,மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் ,இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தீவிரப்படுத்தும் இச்செயல் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் பிஜேபியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.

