தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இழிவாக பேசிய பிஜேபி நிர்வாகி குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய பாஜக நிர்வாகியும், மத்திய அரசின் மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகர் குஷ்புவை கண்டித்து அரூர் நான்கு ரோடு அருகில் திமுக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி தலைமையில், பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால், பேரூராட்சி உறுப்பினர் அருள்மொழிமோகன் ஆகியோர் முன்னிலையில், பெண்கள் ஒன்றுதிரண்டு குஷ்புவை கண்டித்து கண்டன முழக்கமிட்டு பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் பானுமதி ,பத்மபிரியா ,வினோதினி, தீபா, பிரியா, காஞ்சனா ,அம்பிகா, ஜெரீனாசபீர் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்
