மல்யுத்த போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான மல்யுத்த போட்டிகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டு பதக்கங்கள் பெற்றனர்.இவர்களுக்கு கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான 10 வது ஆடவருக்கான மல்யுத்தப் போட்டிகள் (WRESTLING) மார்ச் 08,09,10- ஆகிய நாட்களில் சேலம் மாவட்டம் மேட்டூரில்,நடைபெற்றது.இப்போட்டியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி இளம் அறிவியல் வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஆர்.சுரேந்தர் 74 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாம் இடமும் வெள்ளிப்பதக்கம் பெற்றோர்.

மேலும் இளம் கலை வரலாறு இரண்டாம் ஆண்டு மாணவன் ஆர்.சுரேந்திரா ,63 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடம் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். பதக்கம் வென்ற மாணவர்களுக்கு , வெற்றிக்கான தகுதி சான்றிதழ்களையும், பதக்கங்களையும், வழங்கி, இன்று கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் பாராட்டினார். இந்நிகழ்வில் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன் , வரலாற்றுத் துறை தலைவர் சாரதி, வேதியியல் துறைத் தலைவர் முனைவர் இரா. கிருபாகரன்,விளையாட்டு குழு பேராசிரியஉறுப்பினர்கள்,முனைவர், கே.விஜயதேவன், முனைவர் வெண்ணிலா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் ,மாணாக்கர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

