கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.
கள்ளிபுரம் தலித் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்ககோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பென்னாகரம் துனைவட்டாட்சியர் ஜெயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்டது கள்ளிபுரம் கிழக்கு ,கள்ளிபுரம் மேற்கு கிராமம் .இந்த கிராங்களில் கணிசமாக தலித் மக்கள் வாழ்கின்றனர்.இவர்களில் பெரும்பகுதி விவசாய நிலமற்ற கூலி தொழிலாளர்கள் பலருக்கு சொந்த வீடு இல்லை முன்னோர் கட்டிய வீடுகளில் இரண்டு மூன்று தடுப்புகளாக பிரித்து அதில் வசிக்கின்றனர்.இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்ட கேட்டு கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசு புறம்போக்கு நிலம் உள்ள இந்த கிராமத்தின் அருகாமையில் உள்ள வருவதன அள்ளி கிராமத்தில் 250 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியோரும் போராட்டம்,நடைபெற்றது.அதன்பின்னர் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல கட்ட போராட்டங்கள் நடத்த்தப்பட்டது.
இதன் விளைவாக மார்ச்-11 ம்தேதி கள்ளிபுரம் கிழக்கு மேற்கு கிராமங்களை சேர்ந்த 30 நபர்களுக்கு முதற்கட்டாம தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.மீதமுள்ள நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பரீசிலனையில் உள்ள மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்ட தலைவர் மகாதேவன் வட்டசெயலாளர் ஜே.பி.சுப்பிரமணி,பொருளாளர் எஸ்.வெள்ளிங்கிரி உள்ளிட்ட கள்ளி புரம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
