நல்லம்பள்ளி அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கிணற்றில் தள்ளி கொலை:வாலிபர் கைது
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டா ரெட்டி அள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 5- ம் வகுப்பு பயின்று வந்த 10 வயது சிறுவன் இச்சிறுவன் பழனி மலை முருகன் கோவிலுக்கு மாலை அணிய மார்ச் 13.அன்று விடுப்பு எடுத்துள்ளார், மாலை அணியும் நிகழ்வு முடிந்த பிறகு அன்று நண்பகல் சுமார் 12.00 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அக்கிராமத்திலுள்ள சுடுகாட்டுப் பகுதி வழியாக இளங்கோ என்ற 18 வயது வாலிபர் அழைத்துச் சென்று, அவருக்கு பாலியல் ரீதியிலாக தொல்லைக் கொடுத்துள்ளார். சிறுவன் அணிந்திருந்த மஞ்சள் நிறத் துண்டில் கழுதை இறுக்கி கொலை செய்து, விவசாய கிணற்றி வீசியுள்ளார். இது தொடர்பாக அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கொலை செய்த வாலிபர் இளங்கோவை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுவனின் பிரேதம், பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
