பாலக்கோடு அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா:530 மாணவர்களுக்கு கே.பி.அன்பழகன் எம்எல்ஏ. பட்டம் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
இந்திய அளவில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சியில் கடந்த 2019-2020 கல்வி ஆண்டில் 50.4 சதவீதம் கல்வி தேர்ச்சி பெற்று தமிழகம் முதலிடம் பெற்று சாதனை படைத்தது,மேலும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரியில் 665 புதிய பாடப்பிரிவுகளை,உருவாக்கி மாணவர்களின்கல்விகனவைநனவாக்கினார்,என்று,பேசியதுடன்,மாணவர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாவில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு, கணிதம் உள்ளிட்ட 19 துறைகளை சேர்ந்த, 530 மாணவ – மாணவிகளுக்கு இன்று பட்டம் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பங்காரு வரவேற்றுபேசினார்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் வீரமணி, புதூர்சுப்பிரமணி, சர்க்கரை ஆலை இயக்குநர் மாது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், ரவிச்சந்திரன், கல்லூரி துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

