கள்ளத்துப்பாக்கியில் வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் எச்சரிக்கை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காட்டுத்தீ தடுப்பு குறித்து வனத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைகூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,தலைமையில் இன்று நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது:

காட்டுத்தீ விழிப்புணர்வு
கோடைக்காலம் என்பதால் வனத்தீ அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் தருமபுரி வனச்சரகத்திற்குட்பட்ட நூலஅள்ளி-ரெட்டிஅள்ளி, பரிகம் காப்புக்காடுகள், பாலக்கோடு வனச்சரகத்திற்குட்பட்ட சொக்கம்பட்டி, கெசர்குழி காப்புக்காடுகள், பென்னாகரம் வனச்சரகத்திற்குட்பட்ட பதனவாடி, பேவனூர் காப்புக்காடுகள், ஒகேனக்கல் வனச்சரகத்திற்குட்பட்ட ஒகேனக்கல் காப்புக்காடு, அரூர் வனச்சரகத்திற்குட்பட்ட பள்ளிப்பட்டி வடக்கு, தொம்பக்கல் விரிவாக்கம், பள்ளிப்பட்டி விரிவாக்க காப்புக்காடுகள், தீர்த்தமலை வனச்சரகத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி வடக்கு, வேப்பம்பட்டி விரிவாக்க காப்புக்காடு, மொரப்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட அரூர், பொய்யாப்பட்டி, கவரமலை காப்புக்காடுகள் மற்றும் கோட்டப்பட்டி வனச்சரகத்திற்குட்ட சிட்லிங், கோட்டப்பட்டி, கோட்டப்பட்டி விரிவாக்கம், அம்மாபாளையம் காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் தீயணைப்பு துறை பணியாளர்களுடன் இணைந்து காட்டூதீ தடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தால் தாமாக முன்வந்து ஒப்படைக்கலாம்.
மேலும், மின்சார துறை அலுவலர்களுக்கு, தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள், மரங்களில் உரசி காட்டூதீ ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் தாமாகவே முன்வந்து காவல் துறை அல்லது வனத்துறையிடம் ஒப்படைத்தால், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது.
கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போர் மீது குண்டர் சட்டம்
மாறாக வனத்துறை மூலமாகவோ அல்லது காவல் துறை மூலமாகவோ எவரேனும் கள்ளதுப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தாலோ, வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் / வனக்குற்ற வழக்குகளில் ஈடுபடுவோர் குறித்து விவரங்கள் ஏதும் தெரிந்தால் 1800 425 4586 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளிப்பவர்களுக்கு அரசால் தக்க சன்மானம் வழங்கப்படுவதோடு அவர்களின் பெயர் விவரம் போன்றவை இரகசியமாக பாதுகாக்கப்படும்.
காட்டுத்தீ குறித்து தகவல் தெரிவிக்க.
மேலும், பொதுமக்கள் காட்டூதீ குறித்த தகவலை தெரிவிக்க 1800 425 4586 என்ற வனத்துறை இலவச தொலைபேசி எண்ணிற்கோ அல்லது தங்களது கிராமத்தின் கிராம நிர்வாக அலுவருக்கோ / 101 என்ற தீயணைப்புத் துறை இலவச தொலைபேசி எண்ணிற்கோ தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை மாவட்ட அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, தருமபுரி வனப்பாதுகாப்புப் படை வனச்சரக அலுவலர் க.ஆலயமணி மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் கலந்துக்கொண்டனர்.

