நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 47 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்.
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் நார்த்தம்பட்டி ஊராட்சியில்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 47 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, மின்சாரக்கம்பம், மின்விளக்குகள் மற்றும் ரேஷன் கடை அமைப்பது உள்ளிட்ட பணிகள் துவக்கவிழா நடைபெற்றது.
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ. சுப்ரமணி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்,மரு.டிஎன்விஎஸ்.செந்தில்குமார்ஆகியோர்துவக்கிவைத்தனர்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளருமான
என்.எஸ்.கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.மாவட்ட கழக பொருளாளர் தங்கமணிபொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ்,நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ .எஸ் .சண்முகம்,
நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய கழக செயலாளர் கேபி. மல்லமுத்து
மாணவர் அணி மாவட்டஅமைப்பாளர் பெரியண்ணன்,இளைஞர்அணி மேற்கு மாவட்ட துணைஅமைப்பாளர் மகேஷ் குமார்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
