இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, மாற்ற முயற்சிக்கும், பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சிக்கும் , பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி எஸ்சி/எஸ்டி,பிரிவின் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் வீரமுனிராஜ்,எஸ்சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் ராமசுந்திரம், ஐஎன்டியுசி, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீபன் குமார், எஸ்சி/எஸ்டி, மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வன் ,மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்வாணன்,மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் ,பஞ்ஜயத்ராஜ்ய மாவட்ட தலைவர் ராமலிங்கம் ,தொகுதி தலைவர்கள் பாப்பிரெட்பட்டி முத்து, தருமபுரி யுவராஜ், அரூர் தேவராஜ், பாலக்கோடு சங்கீதா,குமரவேல், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடவேண்டும்.இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்,மதரீதியாக மக்களை பிரிக்க கூடாது.மதமோதலை ஏற்படுத்தும் பிஜேபி ,ஆர்எஸ்எஸ், ஐ. விரட்டியடிப்போம்,என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.
