இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர், ஒதுக்கீடு
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியகம்யூனிஸ்ட்கட்சி நாகப்பட்டினம்,திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று தீர்மானிக்கப்பட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் இரா.முத்தரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

