போதைபொருள் புழக்கத்தை ஒழிக்க கோரி, அதிமுக மனிதசங்கிலி போராட்டம்.
போதைப் பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகில் மனிதசிங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, வரவேற்றார்.அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நல்லம்பள்ளி ஒன்றியசெயலாளர்கள் என்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம், எஸ்.சி.பழனி ,அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் ,
நகர்மன்ற உறுப்பினர்கள் தேவாசெந்தில்,தண்டபாணி,சக்திவேல்,
உமையாள் நாகேந்திரன்,தனலட்சுமி சுரேஷ்,மாவட்ட பிரதிநிதி வேல்முருகன் பலராமன் ,தொழில்நுட்ப அணி மண்டசெயலாளர் பிரசாத்,மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தமிழகத்தில் போதைபொருள் புழக்கத்தை ஒழிக்கவேண்டும்.கஞ்ஜாவில் இருந்து இளைஞர்கள் பள்ளி மாணவர்களை காப்பாற்ற வேண்டும்.தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுக்கவேண்டும், உள்ளிட்ட முழுக்கங்களை எழுப்பினர்.
