நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வருக்கும், மலைவாழ்சங்கத்திற்க்கும் வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம்- பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20, 21, 22 தேதிகளில் வனத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்துறையில் சேர்ந்த 269 பேர்களால் கிராமத்தையே சீரழித்து, வீடுகளை உடைத்து நாசமாக்கினர். வீடுகளிலிருந்து பண்டபாத்திரங்களையும் நசுக்கி, உணவு தானியங்களையும் உண்ண முடியாத வகையில் சேதப்படுத்தினர்.18 இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர். குடிப்பதற்கு கூட குடிநீரில் ஆயில், ஆட்டுத்தோல், ஆட்டு குடல் கழிவுகளை கொட்டிவிட்டனர். மிகக்கொடூரமான சித்ரவதைக்கு ஆளக்கப்பட்டதுடன், மனித உரிமைகளை முழுமையாக மிறி, காட்டு மிராண்டிதனமான செயலில் ஈடுபட்டனர்.

வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற அநீதிக்கும் பாதிப்புகளுக்கும் ,வன்கொடுமைகளுக்கும், நீதிகேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் , தமிழ்நாடு மலைவாசங்கம் சங்கம் நீண்ட நெடிய போராட்டத்தினை நடத்தி பின்னர் சிபிஐ மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு உத்திரவிட்டது, கடந்த 31-ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றம், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து, மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தது.
சென்னை உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ 10 இலட்சம் வழங்கவேண்டும்.இந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.பொருளாதார ரீதியாக முன்னேற தொழில் மற்றும் இரண்டும் ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் கிராமத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணவும் கிராமத்திற்க்கு தேவையான அடிப்படை வசதிகள் தமிழ்நாடு அரசுசெய்து கொடுக்கவேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பில் குறிப்பிட்டதுபோல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ 10 இலட்சம் சனிக்கிழமை அன்று வழங்கப்பட்டது. இதனையடுத்து தருமபுரிக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் வாச்சாத்தி சம்பவ அநீதிக்கு எதிராக 31 ஆண்டுகாலம் போராட்டம் நடத்தி நீதி, நிவாரணாம் பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர்களை தருமபுரியில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு ,மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்ட தலைவர் அம்புரோஸ், மாநிலதுணைத்தலைவர் ஏ.கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.வ.தனுசன் ஆகியோர் உடனிருந்தனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களான பாதிக்கப்பட்ட குடும்பத்தில் குடும்பத்தில ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் . மேலும் வாச்சாத்தி கிராமத்திற்கு இதர கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும். வேலை செய்து தன்னுடைய வாழ்நாளை ஜீவனம் செய்ய, பெண்களுக்கு குறிப்பாக கார்மெண்ட்ஸ் போன்ற சிறு தொழில்,அமைத்து தரவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களில் 4 பேருக்கு வீடு இல்லை அரசு வீடு வழங்கவேண்டும். அரசு நிலம் வழங்கவேண்டும் என தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

