மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வருக்கும், மலைவாழ்சங்கத்திற்க்கும் வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வருக்கும், மலைவாழ்சங்கத்திற்க்கும் வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு

நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வருக்கும், மலைவாழ்சங்கத்திற்க்கும் வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

Social Vision
Last updated: 2024/03/11 at 2:03 PM
Social Vision
Share
2 Min Read
வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
SHARE

நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வருக்கும், மலைவாழ்சங்கத்திற்க்கும் வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டம்- பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20, 21, 22 தேதிகளில் வனத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்துறையில் சேர்ந்த 269 பேர்களால் கிராமத்தையே சீரழித்து, வீடுகளை உடைத்து நாசமாக்கினர். வீடுகளிலிருந்து பண்டபாத்திரங்களையும் நசுக்கி, உணவு தானியங்களையும் உண்ண முடியாத வகையில் சேதப்படுத்தினர்.18 இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர். குடிப்பதற்கு கூட குடிநீரில் ஆயில், ஆட்டுத்தோல், ஆட்டு குடல் கழிவுகளை கொட்டிவிட்டனர். மிகக்கொடூரமான சித்ரவதைக்கு ஆளக்கப்பட்டதுடன், மனித உரிமைகளை முழுமையாக மிறி, காட்டு மிராண்டிதனமான செயலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள்

வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற அநீதிக்கும் பாதிப்புகளுக்கும் ,வன்கொடுமைகளுக்கும், நீதிகேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் , தமிழ்நாடு மலைவாசங்கம் சங்கம் நீண்ட நெடிய போராட்டத்தினை நடத்தி பின்னர் சிபிஐ மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு உத்திரவிட்டது, கடந்த 31-ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றம், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து, மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தது.

இதையும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 
கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்
13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

சென்னை உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ 10 இலட்சம் வழங்கவேண்டும்.இந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.பொருளாதார ரீதியாக முன்னேற தொழில் மற்றும் இரண்டும் ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் கிராமத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணவும் கிராமத்திற்க்கு தேவையான அடிப்படை வசதிகள் தமிழ்நாடு அரசுசெய்து கொடுக்கவேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பில் குறிப்பிட்டதுபோல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ 10 இலட்சம் சனிக்கிழமை அன்று வழங்கப்பட்டது. இதனையடுத்து தருமபுரிக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் வாச்சாத்தி சம்பவ அநீதிக்கு எதிராக 31 ஆண்டுகாலம் போராட்டம் நடத்தி நீதி, நிவாரணாம் பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர்களை தருமபுரியில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள்
இந்நிகழ்வில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு ,மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்ட தலைவர் அம்புரோஸ், மாநிலதுணைத்தலைவர் ஏ.கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.வ.தனுசன் ஆகியோர் உடனிருந்தனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களான பாதிக்கப்பட்ட குடும்பத்தில் குடும்பத்தில ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் . மேலும் வாச்சாத்தி கிராமத்திற்கு இதர கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும். வேலை செய்து தன்னுடைய வாழ்நாளை ஜீவனம் செய்ய, பெண்களுக்கு குறிப்பாக கார்மெண்ட்ஸ் போன்ற சிறு தொழில்,அமைத்து தரவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களில் 4 பேருக்கு வீடு இல்லை அரசு வீடு வழங்கவேண்டும். அரசு நிலம் வழங்கவேண்டும் என தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

TAGGED: தமிழக முதல்வருக்கு நன்றி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள், பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாச்சாத்தி பெண்கள்
Social Vision March 11, 2024 March 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

தீர்த்தமலை – அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்

December 19, 2023
Uncategorized

குரூப்-4 போட்டி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டார்.

June 9, 2024
இந்தியாசினிமா

இப்படி ஒரு புகைப்படமாக! நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோசூட் சூட் 

August 4, 2024
விளையாட்டு

கோவில்பட்டியில் 14ஆவது ஆடவர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பையின் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

November 13, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா

May 19, 2024
மாவட்டங்கள்

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.

June 24, 2024

மேலும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்

April 3, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?