போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு கள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டத்தால் தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் கள்ளிபுரம் கிராமத்தை சேர்ந்த 30 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்டது கள்ளிபுரம் கிழக்கு, கள்ளிபுரம் மேற்கு கிராமம். இந்த கிராங்களில் கணிசமாக தலித் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பகுதி விவசாய நிலமற்ற கூலி தொழிலாளர்கள் பலருக்கு சொந்த வீடு இல்லை முன்னோர் கட்டிய வீடுகளில் இரண்டு மூன்று தடுப்புகளாக பிரித்து அதில் வசிக்கின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்ட கேட்டு கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசு புறம்போக்கு நிலம் உள்ள இந்த கிராமத்தின் அருகாமையில் உள்ள வருவதன அள்ளி கிராமத்தில் 250 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியோரும் போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலபொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.மாதையன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன் எம்.ஆறுமுகம் நிர்வாகிகள் மகாதேவன், ஜே.பி.சுப்பிரமணி, எஸ்.வெள்ளிங்கிரி ஆகியோர் பங்கேற்றனர்.
அதன்பின்னர் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் விளைவாக கள்ளிபுரம் கிழக்கு மேற்கு கிராமங்களை சேர்ந்த 30 நபர்களுக்கு முதற்கட்டாம தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனை பெறப்பட்ட மக்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.மேலும் மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

